#IPL2020 :ஆன்-லைன் ட்ரீம்  லெவன்-களமிரங்கி 1 கோடி வென்று கடை முதலாளி-அசத்தல்

Default Image

ஆன்-லைன் மெய்நிகர் ‘ட்ரீம்  லெவன்’  விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்று 1 கோடி பரிசு வென்றுள்ளார்

 கேரள மாநிலம் கண்ணூர் பானூர் மீத்தேல் பரம்பு  பகுதியை சேர்ந்தவரான கே.எம்.ராஸிக் ஆன்-லைன் மெய்நிகர் ‘ட்ரீம்  லெவன்’  விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்று 1 கோடி பரிசு வென்று அசத்தியுள்ளார்.

IPLலில் தினமும் போட்டிப்போடும் 2  அணிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட 11 வீரர்களின் மெய்நிகர் குழுவை  தேர்ந்தெடுத்து ‘ட்ரீம்  லெவன்’ ஆன்-லைன் கிரிக்கெட் போட்டி  விளையாடப்பட்டு வருகிறது. இதில், நிஜ அணியின் வீரர்கள் அடித்த ரன்கள்,  விக்கெட்டுகள் மற்றும்  பவுண்டரிகளின் அடிப்படையிலேயே இந்த ‘ட்ரீம் லெவன்’  ஆன்-லைன் போட்டியில் விளையாடுபவருக்கு புள்ளிகள் வழங்கப்பட்டும் வருகிகின்றது.

இந்நிலையில், கடந்த புதன் கிழமை கொல்கத்தா அணியும்,சென்னை அணியும் விளையாடியது.இப்போட்டியை ராஸிக் ‘ட்ரீம் லெவன்’  ஆன்-லைன்  கிரிக்கெட் போட்டியில் வீரர்களை தேர்ந்தெடுத்து விளையாடினார். இதில்  ராஸிக்கின் ‘ட்ரீம் லெவன்’ அணி 790.5 புள்ளிகளைப் பெற்று  முதலிடம் பிடித்தது.

இதே போல் இந்தியாவுக்கு  உள்ளேயும், வெளியேயும் ‘ட்ரீம் லெவல்’ ஆன்-லைனில் போட்டியிட்ட 55  லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்களைத் தாண்டி, ராஸிக் இச்சாதனை படைத்து வெற்றியை தன்வசப்படுத்தினார்.வென்ற ராஸித் கண்ணூரில்  ஏகேஜி  மருத்துவமனையில் ஸ்டேஷனரி கடை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றிப்பெற்ற தொகையில் ₹30 லட்சம்  வரி போக, மீதம் ₹70 லட்சம் தொகை அவருக்கு கிடைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


	

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்