இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன் என்றால் தோனி என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் அவர் இந்திய அணிக்காக செய்த சாதனையை அனைத்தும் மக்களுக்கு மனதில் அழிக்கமுடியாத ஒன்றாகத்தான் இருக்கிறது.
இந்நிலையில் தோனியின் ஓய்வு குறித்து மிஹிர் திவாகர் சமீபத்தில் கூறியது நானும் தோனியும் ஒன்றாக இருக்கும் கிரிக்கெட் பற்றி அந்த அளவிற்கு பேச மாட்டோம். ஆனால், அவரின் நடவடிக்கை களைக் கவனிக்கும் போது நிச்சயம் அவர் ஓய்வு பெறமாட்டார் என்பது பற்றி மட்டும் நான் உறுதியாக கூறுவேன் என்று கூறியது ரசிகர்கள் மனதில் சந்தோசத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தோனிக்கு பிறகு CSK அணியின் சிறந்த கேப்டன் யார் என்று கேள்வி ரசிகர்களுக்கு மத்தியில் கேள்வி எழுப்பியுள்ளது. அந்த வகையில் ஒருவேளை சுரேஷ் ரெய்னா ஒரு ஐபிஎல் தொடருக்கு கேப்டனாக செயல்படலாம். ஓரளவு அனுபவம் கொண்ட தலைமைப் பண்பு கொண்ட இளம் வீரரையே CSK அணி நிர்வாகம் கேப்டனாக நியமிக்க விரும்பும் என்று கூறலாம்.
மேலும் அந்த வகையில் தோனிக்கு பின் தற்போது CSK அணியின் முக்கிய அனுபவ வீரர்களாக இருக்கும் சுரேஷ் ரெய்னா, பிராவோ, பாப் டுபிளெசிஸ் என யாருமே கேப்டனாக வர வாய்ப்பில்லை. அவர்கள் அனைவரும் தோனி ஓய்வு பெரும் போது 36 முதல் 38 வயதை அடைந்து இருப்பார்கள்.
இந்நிலையில் இவர்களைத் தாண்டி இளம் வீரர்களை பார்க்கும் போது அனுபவத்துடன் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு சிறப்பாக ஆடக் கூடிய ஒருவர் CSKஅணியில் இருப்பவர் ரவீந்திர ஜடேஜா. தோனிக்கு பின் ஜடேஜா சிஎஸ்கே அணியின் கேப்டன் ஆக மிக மிக அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…