தினேஷ் கார்த்திக் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விரைவில் ஓய்வு.!

Published by
Muthu Kumar

இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விரைவில் ஓய்வு. இன்ஸ்டாகிராமில் உணர்ச்சிப்பூர்வ பதிவைப் பகிர்ந்துள்ளார்.

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் உணர்ச்சிகர பதிவைப் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை விரைவில் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. 2004 ஆம்  ஆண்டு இந்திய கிரிக்கெட்டில் அறிமுகமான தமிழக வீரரான தினேஷ் கார்த்திக், இந்திய அணிக்காக 26 டெஸ்ட், 94 ஒருநாள் மற்றும் 60 டி-20 களில் விளையாடியுள்ளார்.

ஐபிஎல் இல் பெங்களூரு அணிக்காக கடந்த சீசனில் சிறப்பாக விளையாடி தொடர்ச்சியாக ரன்கள் குவித்தார். பெங்களூரு அணியில் கடைசி கட்டத்தில் தேவையான ரன்களை அதிரடியாக அடித்து (பினிஷர்), இந்திய அணி தேர்வுக்குழுவினரின் கவனத்தை ஈர்த்தார். இதன் மூலம் டி-20 உலகக்கோப்பையில் இந்திய அணியில் இடம்பிடித்தார்.

உலகக்கோப்பையில் இந்திய அணி, அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் தோற்று தொடரை விட்டு வெளிறியது. உலகக்கோப்பை தொடருக்கு பிறகு நியூசிலாந்து சுற்றுப்பயணம் சென்ற இந்திய டி-20 அணியில் தினேஷ் கார்த்திக், இடம்பெற வில்லை.

இந்த நிலையில் தினேஷ் கார்த்திக், தனது சமூக ஊடகத்தில் உணர்ச்சிகரப்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, டி-20 உலகக்கோப்பையில் இந்திய அணி சார்பாக விளையாட வேண்டும் என்ற தனது கனவு நிறைவேறி விட்டது,தனக்கு பெருமையாக இருக்கிறது. இந்த தொடரில் நாம் கோப்பையை வெல்ல தவறி விட்டோம், எனினும் எனக்கு நிறைய நல்ல நினைவுகளை கொடுத்திருக்கிறது.

மேலும் எனது நண்பர்கள், பயிற்சியாளர்கள், அணி வீரர்கள், முக்கியமாக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று அந்த பதிவில் அவர் கூறியிருந்தார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விரைவில் ஓய்வு பெறப்போவதற்கு அடையாளமாக இந்த பதிவை வெளியிட்டிருக்கிறார்.

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

16 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

16 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

16 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

16 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

17 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

17 hours ago