பெங்களூர் ரசிகர்களால் தான் உலகக்கோப்பையில் இடம்பிடித்தேன்! தினேஷ் கார்த்திக் எமோஷனல்!

Published by
பால முருகன்

தினேஷ் கார்த்திக் : 2022 உலகக்கோப்பையில் பெங்களூர் ரசிகர்களால் தான் இந்திய அணியில் இடம் பெற்றேன் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட்  வீரர் தினேஷ் கார்த்திக் ஏற்கனவே, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்தார். ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் தினேஷ் கார்த்திக் நடப்பாண்டில் (2024)  ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில், பெங்களூர் அணியில் இருந்து விடைபெற்றது குறித்து தினேஷ் கார்த்திக் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டு வந்தார். அந்த வகையில், சமீபத்தில் பெங்களூரு அணி க்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர். அந்த வீடியோவில் பேசிய தினேஷ் கார்த்திக், 2022 உலகக்கோப்பையில் பெங்களூர் அணியால் தான் இந்திய அணியில் இடம் பெற்றேன் என்று வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய தினேஷ் கார்த்திக், “பெங்களூர் அணிக்காக நான் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியபோது தான் எனக்கு ரசிகர்கள் அதிகமானதாக நான் நினைக்கிறேன். எங்களுடைய அணியில் விராட் கோலி மிக மிக பெரிய பெயர் மற்றும் அவர் ஆர்சிபியின் பெரும் பகுதி. ஆனால், ரசிகர்கள் அதை விட பெரியது.  நான் இந்த அணிக்காக விளையாடிய காரணத்தால் பெற்ற அன்பின் அளவு வார்த்தைகளால் என்னால் சொல்லவே முடியாது.

பெங்களூர் ரசிகர்களால் தான் 2022 உலகக் கோப்பைக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்று சில சமயங்களில் நினைப்பேன். டிகே போட்டியில் கண்டிப்பாக இருக்க வேண்டும்’ என்று மக்கள் எனக்கு ஆதரவு கொடுத்ததை எப்போதுமே என்னால் மறக்கவே முடியாது. 37 வயதில் நான் நீண்ட காலமாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்தபோது, ​​நான் எனது நாட்டிற்காக விளையாடிய சிறிய கட்டத்தில் பெங்களூர் அணியும்  ரசிகர்களும் மிக முக்கியமான பங்கை வகித்ததாக உணர்கிறேன்” எனவும் எமோஷனலாக பேசியுள்ளார்.

மேலும், ஐபிஎல் 2022 மெகா ஏலத்தின் போது பெங்களூர் அணி தினேஷ் கார்த்திக்கை 5.5 கோடிக்கு வாங்கியதிலிருந்து, தினேஷ் கார்த்திக் அணியின் ஒரு முக்கிய நபராக மாறினார் என்றே சொல்லலாம். ஆர்சிபியின் ரசிகர் பட்டாளம் பெரும்பாலும் தினேஷ் கார்த்தியின் ஆட்டத்தை பார்த்து அவருக்காகவே மைதானத்திற்கு வந்து போட்டியை காண்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

1 min ago

ஐபிஎல் 2025 : கேப்டன் பொறுப்பிலிருந்து வெளியேறுகிறார் ‘ரிஷப் பண்ட்’? காரணம் இதுதான்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…

23 mins ago

துலாபார வழிபாடும் அதன் பலன்களும் ..!

சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…

27 mins ago

ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்.! தவெக தொண்டர்களுக்கு அரசியல் பயிலகம் தொடக்கம்…

சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…

41 mins ago

கிடு கிடு உயர்வு! 58,000-த்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…

53 mins ago

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

1 hour ago