ராஜஸ்தான் அணியின் ட்விட்டர் பதிவால் ஸ்டீவ் ஸ்மித், தனது கேப்டன் பதவியை பட்டலருக்கு கொடுக்கப்போறாரா? என்ற கேள்வி ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.
கொல்கத்தா அணியின் கேப்டன் பதிவிலிருந்து தினேஷ் கார்த்திக் விலகினார். அவர் விலகியதால், புதிய கேப்டனாக இயோன் மோர்கன் நிர்ணயிக்கப்பட்டார். இந்தநிலையில், ராஜஸ்தான் அணியின் ட்விட்டர் பக்கத்தில் ஜோஸ் பட்டலரின் புகைப்படத்தை பகிர்ந்து, “ஜோஸ் பட்லர் போல ஒரு பாஸ் இருப்பதற்கு நன்றி” என குறிப்பிட்டிருந்தது, ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது.
மேலும் ஸ்டீவ் ஸ்மித் தனது கேப்டன் பதிவில் இருந்து விலகுவதாக தகவல்கள் வந்ததை தொடர்ந்து, ராஜஸ்தான் அணியின் இந்த ட்வீட், பெருமளவில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும், தினேஷ் கார்த்திக் தனது பதவியை ராஜினாமா செய்த நேரத்தில் இந்த பதிவு இருந்த காரணம், சந்தேகத்தை ஏற்படுத்தி, பெருமளவில் வதந்திகள் பரவியது.
அதுமட்டுமின்றி, நடப்பாண்டில் 8 போட்டிகள் ஆடிய ராஜஸ்தான், 3 போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. மேலும், ஸ்டீவ் ஸ்மித் பேட்ஸ்மேனாகவும் சிறந்து விளங்கவில்லை என்ற காரணத்தினால் கேப்டன் பதவியில் இருந்து விலகியதாகவும் செய்திகள் பரவத் தொடங்கியது. இந்த செய்திகள் அனைத்தும் பொய் எனவும், இது பொய் எனவும் தெரிவித்தனர்.
அதனை நிரூபிக்கும் விதமாக ராஜஸ்தான் அணி மீண்டும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டது. அதில் ஸ்டீவ் ஸ்மித் புகைப்படத்தை பதிவிட்டு, “கேப்டன்” என குறிப்பிட்டு, இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30…
கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில்…
காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…
கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…