மோசடி வழக்கில் தோனியின் முன்னாள் தொழில் பங்குதாரர் கைது..!!

Published by
அகில் R

MSDhoni : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனும் ஆன எம்.எஸ்.தோனியின் முன்னாள் தொழில் பங்குதாரர் கடந்த செவ்வாய்கிழமை அன்று மோசடி வழக்கில் கைது செய்யபட்டுள்ளார்.

இந்திய அணியில் வெற்றி நடைப்போட்டு சிறப்பான கேப்டனாக செயலாற்றியவர் தான் எம்.எஸ்.தோனி. இவரது கேப்டன்சியில் இந்திய அணி வெல்லாத ஐசிசி கோப்பைகள் கிடையாது என்பது நமக்கு தெரியும். சர்வேதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் தொடரில் சிஸ்கே அணியில் தற்போது விளையாடி வருகிறார். இந்நிலையில் இவரது முன்னாள் தொழில் பங்குதாரர் ஆன மிஹிர் திவாகர் மோசடி வழக்கில் கடந்த செவ்வாய்கிழமை அன்று கைது செய்யப்பட்டிருக்கிறார்.

தோனி, ஆர்கா ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனத்திற்கு சொந்தக்காரர்கள் ஆன மிஹிர் திவாகர் மற்றும் அவரது மனைவியான சௌமியா தாஸ் ஆகியோர்களுடன் ஒப்பந்தம் செய்து இருந்தார். அது என்னவென்றால் இந்தியாவிலும் உலகெங்கிலும் ஒரு கிரிக்கெட் அகாடமிகளை நிறுவி கிரிக்கெட் பயிற்சிகளை கொடுக்க வேண்டும் என்பது தான். ஆனால், ஒப்பந்தம் போட்டதில் இருந்து அதை இருவரும் கண்டுகொள்ளாமல் இருவரும் சுமார் ரூ.16 கோடியை ஏமாற்றியதாக கூறி எம்.எஸ்.தோனி முன்னதாக குற்றம் சாட்டினார்.

கடந்த 2017 ஆம் ஆண்டின் போது தோனியின் பெயரில் உலகம் முழுவதும் ஆங்காங்கே கிரிக்கெட் அகாடமிகளைத் திறக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், கிரிக்கெட் அகாடமியை திறப்பது உள்ளிட்ட ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள ஒரு நிபந்தனைகளையும் திவாகர் கடைபிடிக்கவில்லை என்று அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி அன்று எம்.எஸ்.தோனி ஆர்கா ஸ்போர்ட்ஸிற்கான அங்கீகாரக் கடிதத்தை வாபஸ் பெற்றதுடன் அந்நிறுவனத்திற்கு எதிராக சட்ட நோட்டீஸ்களையும் அனுப்பி வைத்தார்.

அதன்பின் அந்த நோட்டீஸ்களை திரும்ப பெற்றதும் இல்லாமல் தோனியின் பெயரில் விளையாட்டு அரங்கம், விளையாட்டு வளாகம், மற்றும் அகாடமிகளை திறந்து அதில் லாபம் ஈட்டி வந்துள்ளனர். இது தொடர்பான எந்த ஒரு தகவலோ அல்லது அதன் மூலம் பெற்ற லாபத்தையோ தோனியிடம் தெரிவிக்காமல் இருந்ததாக தோனியின் வழக்கறிஞர் தொடுத்த வழக்கில் கூறி இருக்கிறார். இதன் அடிப்படையில் மோசடி வழக்கின் பெயரில் மிஹிர் திவாகரை கடந்த செவ்வாய்கிழமை அன்று கைது செய்துள்ளனர்.

Recent Posts

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

3 minutes ago
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

35 minutes ago
அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…

1 hour ago

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

17 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

17 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

18 hours ago