உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒரு நாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில் பும்ரா மற்றும் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பை தொடர் முடிந்ததும் தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என்று பல கருத்துக்கள் எழுந்தது. ஆனால் தோனி இதுகுறித்து மௌனம் சாதித்தார். ஆனால் தற்போது 2 மாதங்கள் மட்டும் ஓய்வு பெற்று இராணுவ பணியாற்றுவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் பேஸ்புக்கில் வெளிவந்த பதிவு ஒன்றில் ” உலகக்கோப்பை அரையிறுதியில் தோல்வி அடைந்தது ஏமாற்றத்தை ஏற்படுத்திருக்கும். தனது ஓய்வு குறித்து பல வதந்திகள் எழுந்துள்ளது. கிரிக்கெட்டில் இருந்து விலக இது சரியான நேரமில்லை. ஆஸ்திரேலியாவில் அடுத்தாண்டு நடக்கவிருக்கும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவேன். ரசிகர்கள் கவலைப்பட தேவையில்லை” என்றவாரு பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புளூ டிக் இருப்பதால் உண்மை என்று பலர் நம்ப தொடங்கினர். ஆனால், இது தோனியின் ரசிகர்களால் உருவாக்கப்பட்டது என்று தகவல் வெளியாகியது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…