தோனியின் அறிமுகம்., 16 ஆண்டுகள்., ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்.!

Published by
பாலா கலியமூர்த்தி

16 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, தோனியின் ரசிகர்கள் சிறப்பு ஹாஷ்டாக் ஒன்றை பதிவு செய்து ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

கிரிக்கெட்டில் பல சாதனைகளை புரிந்து, இந்திய மட்டுமின்றி உலக ரசிகர்களின் மனதில் மிக பெரிய இடம் பிடித்தவர் தோனி. இவர் இந்தியாவுக்காக அனைத்து உலக வகை கோப்பையையும் பெற்றுத் தந்தவர். இவரது ஓய்வு பலரையும் சோகத்தில் மூழ்கடித்தது. ஆனாலும், சரியான நேரத்தில் தனது ஓய்வு அறிவித்து, இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து அவரது ஸ்டைலேயே விடைபெற்றார்.

தன்னுடைய ஓய்வுக்குப் பின் ஒரு பலமான அணியையும் உருவாக்கி தந்துள்ளார். தற்போது, இந்திய அணியில் விளையாடி வரும் முக்கிய வீரர்கள் தோனியின் தலைமையில் உருவாகியவர்கள் என்று சொல்வதற்கு மறுப்பு ஏதுமில்லை. இந்திய அணிக்கு மட்டுமின்றி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் அவரது பங்களிப்பு அதிகம் உள்ளது. அவர் தற்போது மைதானத்தில் இல்லையென்றாலும் அவரது பெயர் பல இடங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

இந்நிலையில், நாளையுடன் கிரிக்கெட்டில் காலடி எடுத்துவைத்து 16 ஆண்டுகள் நிறைவடைவதை அடுத்து, தோனியின் ரசிகர்கள் சிறப்பு ஹாஷ்டாக் ஒன்றை பதிவு செய்து ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர். அதாவது, 2004 டிசம்பர் 23-ஆம் தேதி வங்கதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டி மூலம் இந்திய அணியில் மகேந்திர சிங் தோனி அறிமுக வீரராக களமிறங்கியதை கொண்டாடும் வகையில் அவரது ரசிகர்கள் #16YearsOfIconicDhoni என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும், தோனியின் சாதனைகளையும் அவர் எடுத்த ரன்கள் குறித்த தகவல்களையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக அவரது ஸ்பெஷலான ஹெலிகாப்டர் ஷாட் பற்றி ரசிகர்கள் பெருமையாக கூறி வருகின்றனர். ஒரு சாதாரண இடத்தில் இருந்து வந்து இந்திய அணிக்கு பல பெருமைகளை சேர்த்த தோனிக்கு ட்விட்டரில் பலரும் பாராட்டுகளை தெரிவித்தும், கிரிக்கெட்டில் காலடி எடுத்துவைத்து 16 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டடி வருகின்றனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

4 minutes ago

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…

35 minutes ago

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…

1 hour ago

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

2 hours ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

3 hours ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

4 hours ago