தோனி ஓய்வு பெறுவது சாத்தியமில்லை..!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிகச்சிறந்த வகையில் அணி வழிநடத்தியவர் கேம் செஞ்சர் என்ற பல பெயர்களுக்கு சொந்தக்கா ரராக திகழ்பவர் மஹிந்திர சிங் தோனி அன்மைக் காலமாக அவருடைய ஓய்வு குறித்த சர்ச்சை பேச்சுக்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதற்கு தோனி தரப்பில் உறுதி செய்யப்படதா நிலையில் சமீபத்தில் 2020ம் ஆண்டுக்கான வீரர்களின் ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது.
இந்த நிலையில் தோனி ஓய்வு குறித்து மேனேஜர் மிஹிர் திவாகர் கூறுகையில், நானும் தோனியும் ஒன்றாக இருக்கும் கிரிக்கெட் பற்றி அந்த அளவிற்கு பேச மாட்டோம். ஆனால், அவரின் நடவடிக்கை களைக் கவனிக்கும் போது நிச்சயம் அவர் ஓய்வு பெறமாட்டார் என்பது பற்றி மட்டும் நான் உறுதியாக கூறுவேன், மேலும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறார். என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் மேலும் அதற்காக, கடினமான முறையில் பயிற்சிகள் மேற்கொண்டு வருவது உங்களுக்கே அனைவர்க்கும் தெரியும், மேலும் ஐபிஎல் போட்டிக்காக ஒரு மாதத்திற்கு முன்பே சென்னையில் பயிற்சிகளைத் தொடங்கினார். இன்றளவும் கிரிக்கெட் மீது மிகுந்த ஈடுபாட்டுடன் தோனி இருக்கிறார்” என்று கூறினார்.