ஐபிஎல் பொறுத்தே தோனி இந்திய அணியில் சேர்க்கப்படுவது தவறான கணிப்பு – ஆகாஷ் சோப்ரா

Published by
பாலா கலியமூர்த்தி

தோனி ஐபிஎல் போட்டியில் விளையாடுவது பொறுத்துதான் அவர் மீண்டும் இந்திய அணிக்குள் சேர்க்கப்படுவார் என்ற தவறான கணிப்பு முற்றிலும் தவறு என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடந்த 2019 ஆம் ஆண்டு நியூஸ்லாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதிக்கு பின்னர் இந்திய அணிக்காக எந்த போட்டியிலும் திரும்ப விளையாடவில்லை. இந்த ஆண்டு நடைபெற இருந்த ஐபிஎஸ் போட்டியில் தோனி விளையாடுவார், அதைப்பொறுத்தே இந்திய அணியில் மீண்டும் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து போட்டிகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனால் தோனி மீண்டும் இந்திய அணியில் விளையாடுவது, அதுவும் டி20 உலகக்கோப்பையில் விளையாடுவது சந்தேகத்திற்குரியதாக மாறிவிட்டது. இதை குறித்து இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான ஆகாஷ் சோப்ரா இதை முற்றிலும் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், தோனி ஐபிஎல் போட்டியில் விளையாடுவது பொறுத்துதான் அவர் மீண்டும் இந்திய அணிக்குள் சேர்க்கப்படுவார் என்ற கணிப்பு முற்றிலும் தவறானது என்று கூறியுள்ளார்.

ஒருவேளை தோனி அணியில் சேர்ப்பது என்றால், அவர் எப்படிப்பட்ட கிரிக்கெட் வீரர் என்பதும், அவரது கிரிக்கெட் அனுபவம் குறித்தும், அவர் ஒரு கிரிக்கெட்டராக சாதித்தது பற்றியும் அனைவர்க்கும் தெரியும். அதன் அடிப்படையில் தான் தேர்வு செய்வார்கள் தவிர, ஐபிஎல் மூலம் தேர்வு செய்யப்படுவார் என்பது முற்றிலும் தவறானது என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தோனி இந்திய அணிக்கு தேவை என அணி நிர்வாகம் நினைத்தால், அதேசமயம் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று தோனி நினைத்தால் மட்டுமே நடக்கும்.

தொடர்ந்து பேசிய அவர், ஐபிஎல் போட்டியில் அவர் விளையாடுவதை பொறுத்துதான் டி20 உலகக் கோப்பைக்கான போட்டியில் சேர்ப்பார்கள் என்று கூறுவது தவறு. என் கணிப்புப்படி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டி20 உலக கோப்பை தள்ளிப்போகும் என்றும் இதனால் தோனிக்கு ஒரு வயது அதிகரிக்கும், அத்துடன் அவர் விளையாடாத காலம் 18 மாதங்கள் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் வேண்டுமானால் அவரை அணியில் தேர்வு செய்யாமல் விடலாம் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இது என்னடா புது புரளி..? 22 மந்திரவாதியை வச்சி இந்தியா, பாகிஸ்தானை ஜெயிச்சிடுச்சாம்!?

இது என்னடா புது புரளி..? 22 மந்திரவாதியை வச்சி இந்தியா, பாகிஸ்தானை ஜெயிச்சிடுச்சாம்!?

துபாய் : இந்த வருட சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. ஆனால், துரதிஷ்டவசமாக பாகிஸ்தான்…

25 minutes ago

பதில் சொல்லுங்க., இல்லைனா வேலையை விட்டு போங்க.., அரசு ஊழியர்களிடம் ‘கறார்’ காட்டும் எலான் மஸ்க்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று எலான் மஸ்கின் தீவிர…

1 hour ago

தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,

சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…

2 hours ago

LIVE : தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்… 2வது நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம் வரை!

சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…

3 hours ago

சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!

நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…

4 hours ago

வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!

வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…

4 hours ago