தொடரும் ஆக்சிஜன் பற்றாக்குறை.. ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கிய டெல்லி அணியின் அதிரடி பேட்ஸ்மேன் தவான்!

Published by
Surya

ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடும் ஷிகர் தவான், இந்தியாவில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ரூ.20 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு 3 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாட்டுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

காசு கொடுத்தும் ஆக்ஸிஜன் கிடைக்காமல் பலரும் உயிரிழந்து வரும் நிலையில், பிரபலங்கள் கிரிக்கெட் வீரர்கள் என பலரும் உதவி வருகின்றனர். அந்தவகையில், இந்திய அணியின் பேட்ஸ்மேன் மற்றும் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடும் ஷிகர் தவான், இந்தியாவில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ரூ.20 லட்சம் நிதி அளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “நாம் இப்போது இக்கட்டமான சூழ்நிலையில் இருக்கின்றோம். இந்த நேரத்தில் நாம் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வது, காலத்தின் தேவையாக உள்ளது. நீங்கள் இத்தனை நாட்களாக எனக்கு கொடுத்த அன்பையும், ஆதரவையும் நான் நாட்டு மக்களுக்காக கொடுக்கவுள்ளேன்”

அந்தவகையில், இந்தியாவின் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்து வரும் நிலையில், ரூ. 20 லட்சமும், இனி நடைபெறவுள்ள போட்டிகளில் எனக்கு கிடைக்கும் பரிசு தொகையையும் மிஷன் ஆக்ஸிஜனுக்கு கொடுக்கவுள்ளேன். கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு ஈடுபடும் முன்கள பணியாளர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். நீங்கள் செய்யும் பணிக்கு நாங்கள் கடன்பட்டுள்ளோம். அனைவரும் முகக்கவசம் அணியுங்கள், சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். ஒன்றுபடுவோம், வெல்வோம்” என்று தெரித்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்தியா! வீரர்களுக்கு பிசிசிஐ கொடுத்த கிஃப்ட்!

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்தியா! வீரர்களுக்கு பிசிசிஐ கொடுத்த கிஃப்ட்!

டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…

21 minutes ago

மேலும் 487 இந்தியர்களை நாடுகடத்த அமெரிக்கா திட்டம்! விக்ரம் மிஸ்ரி சொன்ன தகவல்!

அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக  104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…

60 minutes ago

அடிமேல் அடி…லைக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த விடாமுயற்சி! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…

1 hour ago

இத்தனை நாளு எங்கய்யா இருந்த? ஸ்ரேயாஸ் ஐயரை புகழ்ந்து தள்ளிய ரிக்கி பாண்டிங்!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …

3 hours ago

கந்தூரி விழா : காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை (08.02.2025) உள்ளூர் விடுமுறை!

புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை  என மாவட்ட புதுச்சேரி…

4 hours ago

மாநிலங்களுக்கு மத்திய அரசு தரும் அல்வாதான் இப்போ ஃபேமஸ்! முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

திருநெல்வேலி : முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று (7.2.2025) திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில், 75,151 பயனாளிகளுக்கு 167 கோடி ரூபாய்…

4 hours ago