ஐபிஎல் தொடரில் தற்பொழுது சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிவரும் நிலையில், இன்றைய போட்டியில் ஷிகர் தவான், 7 ரன்கள் எடுத்தால் கோலியின் சாதனையை முறியடித்திருப்பார்.
ஐபிஎல் தொடரில், இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிவருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 180 ரன்கள் எடுத்தது. 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது சென்னை அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், பெங்களூர் அணியின் முன்னாள் கேப்டன் கோலியின் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதாவது, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்தோர் பட்டியலில் 949 ரன்கள் அடித்து விராட் கோலி முதல் இடத்தில் இருக்கின்றார். அவரையடுத்து இரண்டாம் இடத்தில் ஷிகர் தவான் இருக்கும் நிலையில், இன்றைய போட்டியில் அவர் 41 ரன்கள் எடுத்து விராட் கோலியை முந்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர் இன்றைய போட்டியில் 33 ரன்கள் அடித்த நிலையில், இன்னும் 7 ரன்கள் அடித்தால் தவான் இந்த சாதனையை முறியடித்து, சென்னை அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை அடைந்திருப்பார்.
சென்னை : மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயர் தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் தலைப்பு செய்திகளில் இடம்…
ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…
டெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) இந்த ஆண்டு நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த…
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்களுடைய…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…