ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய டெவோன் கான்வே… சென்னை அணிக்கு புதிய வீரர் இவர்தான்!

Published by
பாலா கலியமூர்த்தி

ஐபிஎல்2024: காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து டெவோன் கான்வே விலகினார் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் லீக் சுற்றில் அனைத்து அணிகளும் தலா 6 போட்டிகளில் விளையாடி உள்ளனர். அதில் குறிப்பாக சென்னை 6 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்த சூழலில் சென்னை அணியின் முக்கிய வீரராக இருந்த டெவோன் கான்வே காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ஐபிஎல் சீசன் தொடங்கும் முன்பே டெவோன் கான்வேவுக்கு கட்டை விரலில் காயம் ஏற்பட்டதில் முதல் பாதியில் பங்கேறக்கமாட்டார் என்றும் இரண்டாம் பாதியில் சென்னைக்கு திரும்புவார் எனவும் கூறப்பட்டது.

டெவோன் கான்வே காயம் ஏற்பட்டதால் சென்னை அணிக்கு சற்று ஓப்பனிங் பேட்டிங்கில் பின்னடைவாக இருக்கும் என கருதப்பட்டது. ஆனால், கான்வே இடத்தில் ரச்சின் ரவீந்திரா களமிறங்கி சிறப்பாக விளையாடி வருகிறார். இருந்தாலும் கான்வே அளவுக்கு அவர் இல்லை என்று ரசிகர்கள் மத்தியில் கருத்து இருந்து வந்தது. இதனால் கான்வே எப்போது அணிக்கு திரும்புவார் என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர்.

ஆனால், ரசிகர்களுக்கு தற்போது ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அதாவது நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து கான்வே விலகினார் என்றும் அவருக்கு பதில் ரிச்சர்ட் க்ளீசனை சென்னை அணி வாங்கியுள்ளது எனவும் ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. டெவோன் கான்வே கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 23 போட்டிகளில் விளையாடி 924 ரன்கள் எடுத்துள்ளார்.

இதில் 9 அரை சதங்கள் மற்றும் அதிகபட்ச ஸ்கோர் 92* ரன்களை அடித்துள்ளார். இதில் குறிப்பாக கடைசி சீசனில் கான்வே சென்னை அணிக்கு ஒரு தூணாக இருந்தார். தற்போது அவர் விலகியதால் இங்கிலாந்து வீரர் ரிச்சர்ட் க்ளீசனை ரூ.50 லட்சத்துக்கு சிஎஸ்கே அணி வாங்கியுள்ளது. இங்கிலாந்து நாட்டுக்காக 6 T20 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை எடுத்துள்ள ரிச்சர்ட் க்ளீசன், மொத்தம் 90 டி20 போட்டிகளில் விளையாடி 101 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Recent Posts

முடிஞ்சா மோதி பாருங்க!! ரசிகர்களால் ரோஹித்துக்கு புதிய சாதனை.! என்ன தெரியுமா?

மும்பை : நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்று, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை மும்பை…

60 minutes ago

மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்து விபத்து! 33 பேர் காயம்..மீட்பு பணி தீவிரம்!

மலேசியா :  தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே உள்ள புறநகர்ப் பகுதியான புத்ரா ஹைட்ஸில் (Putra Heights), செலங்கோர் மாநிலத்தில், பெட்ரோனாஸ்…

1 hour ago

அச்சுறுத்தும் தெருநாய்க்கடி: “ஆபத்தான நாய்களை கருணைக் கொலை செய்யலாம்” – அன்புமணி

சென்னை : தமிழ்நாட்டில் தெருநாய்க்கடி சம்பவங்கள் என்பது சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகின்றன, உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், இந்த…

2 hours ago

சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.! 2 பைலட்டுகள் சம்பவ இடத்திலேயே பலி.!

பர்ஹைட் : ஜார்க்கண்டின் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தின் பர்ஹைட் என்கிற பகுதியில் 2 சரக்கு ரயில்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 2…

2 hours ago

அண்ணாமலைக்கு எதிரான கருத்து: ஆதவ் அர்ஜூனாவுக்கு மார்ட்டினின் மகன் சரமாரி குற்றச்சாட்டு.!

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் கடந்த மார்ச் 28ம் தேதி சென்னை திருவான்மியூர்ராமச்சந்திரா…

3 hours ago

சம்பவம் செய்யும் வீர தீர சூரன்…வசூல் முதல் ஓடிடி அப்டேட் வரை!

சென்னை : விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் பெரிய எதிர்பார்புகளுக்கு மத்தியில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில்…

4 hours ago