முக்கியச் செய்திகள்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இணைகிறார் தேவ்தத் படிக்கல்..?

Published by
செந்தில்குமார்

IPL2024 : இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) என்பது ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ஒரு கிரிக்கெட் திருவிழா ஆகும். இதில் 10 அணிகள் பங்கேற்று விளையாடும். அந்த வகையில், கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப்போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டு வெற்றி பெற்றது.

இதன்மூலம் சென்னை 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இதேபோல, 17 ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த 20 ஓவர்கள் கொண்ட இந்த டி-20 தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் அதாவது டிசம்பர் 19ம் தேதி, துபாயில் நடைபெற உள்ளது.

பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று.! கத்தாரிடம் இந்தியா தோல்வி.!

இந்நிலையில், இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஏலத்திற்கு முன்னதாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தேவ்தத் படிக்கல்-ஐ அணியில் சேர்க்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அவர்களின் மிடில் ஆர்டரை வலுப்படுத்த, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து தேவ்தத் படிக்கலை தங்கள் அணியில் சேர்க்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் 2019க்கு முன்னதாக தேவ்தத் படிக்கல் ரூ.20 லட்சத்திற்க்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலத்திற்கு எடுத்தது. ஆனால் அந்த சீசனில் அவர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. ஆனால் அடுத்த ஆண்டு அவர் விளையாடிய 15 போட்டிகளில் 473 ரன்கள் எடுத்தார்.

IPL 2024: இரண்டு முறை சாம்பியனாக்கிய அணிக்கு திரும்பிய கெளதம் கம்பீர்..!

2020ம் ஆண்டைப் போலவே 2021 வது ஆண்டிலும் சிறப்பாக செயல்பட்டார். இதன்பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி படிக்கலை ரூ.7.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இந்த முறை இரண்டு சீசன்களில் முறையே 376 மற்றும் 261 ரன்கள் எடுத்தார். இதனால் அவர் ஆட்டம் நம்பிக்கை அளிக்கும் வகையில் இல்லை எனக் கூறி, ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் அவரை விடுவிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு இடையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இருந்து வெளியேறிய கௌதம் கம்பீர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்து உள்ளார். கம்பீரின் தலைமையின் கீழ் கொல்கத்தா அணி இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

இது போர் தான்.., இந்தியா – பாகிஸ்தானின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்…

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…

50 seconds ago

பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…

47 minutes ago

உடனே வெளியேறுங்கள்.., 27ம் தேதி வரை தான் டைம்.! பாக். நாட்டினருக்கு விசா சேவை நிறுத்தம்.!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…

1 hour ago

இந்தியாவின் அடுத்த நகர்வு.., போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி!

சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…

2 hours ago

இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…

2 hours ago

பஹல்காம் தாக்குதல் : “முஸ்லீம்கள் – இந்துக்களை தனித்தனியாக பிரிக்க சொன்னார்கள்?” தந்தையை இழந்த சிறுவன் பகீர் தகவல்!

காந்திநகர் : நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் அனந்த்நாத் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய…

3 hours ago