இன்றைய 16-வது போட்டியில் டெல்லி அணியும், கொல்கத்தா அணியும் மோதியது. இப்போட்டி, ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா, ஷிகர் தவான் இருவரும் களமிறங்கினர். நிதானமாக விளையாடிய ஷிகர் தவான் 26 ரன்னில் வெளியேறினர். பின்னர், ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்க பிருத்வி ஷா , ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய பிருத்வி ஷா அரைசதம் விளாசி 66 ரன்கள் குவித்தார்.
இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 88 * ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் நின்றனர். இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 228 ரன்கள் குவித்தனர்.
229 ரன்கள் இலக்குடன் கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்களாக சுப்மன் கில், சுனில் நரைன் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே சுனில் நரைன் 3 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர், நிதீஷ் ராணா களமிறங்க நிதானமாக விளையாடிய சுப்மன் கில் 28 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
இதைத்தொடர்ந்து, இறங்கிய ரஸ்ஸல் 13 ,
தினேஷ் கார்த்திக் 6 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் சென்றனர். மத்தியில் களம் கண்ட மோர்கன் 44 , ராகுல் திரிபாதி 36 ரன்கள் குவித்தனர். இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 210 ரன்கள் எடுத்து, 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில், இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளி பட்டியலில் டெல்லி அணி முதலிடத்தில் உள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…