சூப்பர் ஓவர்.. டெல்லி அணி த்ரில் வெற்றி..!

Default Image

ஐபிஎல் டி20 தொடரின் 2-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதியது. இப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது.

டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா, ஷிகர் தவான்  களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலேயே தவான் ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட் ஆனார். இதையடுத்து, பிருத்வி ஷா 5 ரன்னில் வெளியேற பின்னர், இறங்கிய மார்கஸ் ஸ்டாய்னிஸ் அதிரடியாக விலையாடி 53 ரன்கள் குவித்தார்.

இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 157 ரன்கள் எடுத்தனர். 158 ரன்கள் இலக்குடன் பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்களாக கே.எல் ராகுல்,  மயங்க் அகர்வால் இருவரும் களமிறங்கினார். நிதானமாக விளையாடி வந்த ராகுல் 21 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

பின்னர் இறங்கிய கருண் நாயர், நிக்கோலஸ் பூரன், மேக்ஸ்வெல் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால், பஞ்சாப் அணி மோசமான நிலையில் இருந்தது. அப்போது, தொடக்க வீரராக களம் இறங்கிய மயங்க் அகர்வால் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்து 89 ரன்கள் குவித்தார்.

இறுதியாக பஞ்சாப் அணி 8 விக்கெட்டை இழந்து 157 ரன்கள் எடுத்தது. இதனால் போட்டி சமனில் முடிந்ததால் சூப்பர் ஓவர் நடைபெற்றது. சூப்பர் ஓவரில் முதலில் இறங்கிய  பஞ்சாப் அணி 2 விக்கெட்டை இழந்து 2 ரன்கள் எடுத்தது. பின்னர் இறங்கிய டெல்லி அணி 3 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live 20032025
GoodBadUgly
digital scams old women
DMK MPs protest at Delhi Parliament
cm mk stalin
impact player rule in ipl
velmurugan mla