டெல்லி கேப்டன் ரிஷப் பண்டிற்கு தடை…RCB போட்டியில் புதிய சிக்கல்.?

Published by
பால முருகன்

Rishabh Pant : டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் ஒரு போட்டியில் விளையாட அபராதத்துடன் தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் நாளை (மே 12) பெங்களூரு  அணிக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் விளையாட பிசிசிஐ தடை விதித்துள்ளது. ஏனென்றால், ஏற்கனவே, 2 முறை டெல்லி மெதுவாக பந்துவீசியதற்கு அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து கடந்த 7-ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் மெதுவாக பந்துவீசியதற்கும் (slow over-rate) அபராதம் விதிக்கப்பட்டது.

2 முறை அபராதம் விதிக்கப்பட்டும் மூன்றாவது முறையாகவும் மெதுவாக பந்துவீசியதன் காரணத்தால் ரிஷப் பண்ட்க்கு 30 லட்சம் அபராதம் மற்றும் ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் போட்டிக்கு முன்னதாக, கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி மெதுவாக பந்துவீசிய குற்றத்திற்காக கேப்டன் ரிஷப் பண்ட்க்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. 

அதற்கு முன், சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட்க்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. நாளை பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் இல்லாதது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் டெல்லி அணி பிளே ஆப்சுற்றுக்கு தகுதி பெறவில்லை.

இந்த சீசனில், 12 போட்டிகள் விளையாடி 6 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளி விவரப்பட்டியலில் 5-வது இடத்தில் இருக்கிறது. அடுத்ததாக நடைபெறும் இரண்டு போட்டிகளும் டெல்லி அணிக்கு முக்கியமான போட்டி  எனவே, இப்படியான முக்கியமான போட்டியில் ரிஷப் பண்ட் இல்லை என்பதால் அணியை எந்த வீரர் வழிநடத்த போகிறார் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.

Published by
பால முருகன்

Recent Posts

INDvsPAK: கடைசி நேரத்தில் அடுத்தடுத்து சரிந்த பாக்., வீரர்கள்.! பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா…

துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…

3 hours ago

மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!

ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…

4 hours ago

NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…

துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…

4 hours ago

வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!

சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…

5 hours ago

INDvsPAK: நீயா? நானா? வெற்றி வாகை யாருக்கு! டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்.!!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…

7 hours ago

IND vs PAK: பாகிஸ்தான் அணிக்கே வெற்றி!! “கோலி என்னதான் முயற்சி செஞ்சாலும் இந்தியா வெற்றி பெறாது” – கணித்த IIT பாபா!

உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…

8 hours ago