#image_title
IPL2024: குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 220 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்றைய ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியு,ம் டெல்லி அணியும் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவரில் 4விக்கெட்டை இழந்து 224 ரன்கள் எடுத்தனர். இதில் அதிகபட்சமாக அக்சர் படேல் 66 ரன்களும், கேப்டன் ரிஷப் பந்த் 88* ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
அதே நேரத்தில் கடைசியில் களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 7 பந்தில் 2 சிக்ஸர், 3 பவுண்டரி என மொத்தம் 26* ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். டெல்லி அணியில் சந்தீப் வாரியர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
225 ரன்கள் இலக்குடன் குஜராத் அணியில் தொடக்க வீரர்களாக விருத்திமான் சஹா, சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். இரண்டாவது ஓவரில் கேப்டன் சுப்மன் கில் 6 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் கூட்டணி அமைத்த விருத்திமான் சஹா, சாய் சுதர்சன் இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் ரன்களை உயர்த்தினர்.
இதில் நிதானமாக விளையாடி வந்த விருத்திமான் சஹா 39 ரன்னில் விக்கெட்டை இழந்தார். மறுபுறம் அதிரடியாக விளையாடி வந்த சாய் சுதர்சன் 65 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ஓமர்சாய் 1 ரன்னிலும், ஷாருக்கான் 8 ரன்னிலும் நடையை கட்டினார்.
மத்தியில் களமிறங்கிய டேவிட் மில்லர் அதிரடியாக விளையாடி 22 பந்தில் 55 ரன்கள் குவித்தார். அதில் 6 பவுண்டரி, மூன்று சிக்ஸர் அடங்கும். 8-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய சாய் கிஷோர் 6 பந்தில் 13 ரன்கள் எடுக்க இறுதியாக குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 220 ரன்கள் எடுத்தனர்.
இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் அணி இதுவரை 9 போட்டியில் விளையாடி உள்ளது. இதில் நான்கு போட்டிகளில் வெற்றியும், ஐந்து போட்டியில் தோல்வி தழுவி உள்ளது. அதே நேரத்தில் டெல்லி அணி இதுவரை 9 போட்டியில் விளையாடி 4 போட்டியில் வெற்றியும், 5 போட்டியில் தோல்வியும் தழுவி உள்ளது.
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…