பந்துவீச தாமதம்! இந்திய அணிக்கு 39.6 லட்சம் அபராதம்.!

Default Image

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக இந்திய அணிக்கு, ரூ.39.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. 350 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி இறுதி வரை போராடி 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோற்றது. மேலும் இந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் பந்துவீச தாமதம் ஆனதால் இந்திய வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நேரத்திற்குள் ஓவர்கள் வீசப்படாததால் 3 ஓவர்கள் குறைவாக வீசப்பட்டுள்ளது என்று போட்டியின் நடுவர் ஜவகல் ஸ்ரீநாத், கூறினார். இதனால் ஒவ்வொரு வீரருக்கும் போட்டியின் கட்டணத்தில் 60% அபராதம் விதிக்கப்பட்டது. கேப்டன் ரோஹித் ஷர்மாவும் இதனை ஏற்றுக்கொண்டார். இரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ராய்ப்பூரில் நாளை நடைபெறுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்