தோனியின் மற்றொரு பக்கத்தை புரிந்து கொண்டேன்… தீபக் சாஹர்.!

Default Image

தோனி தனக்கு கால் செய்து கருத்துக்களை வழங்கியதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இந்த வருட  ஐபிஎல் போட்டி வருகின்ற செப்டம்பர் மாதம் 19 -ம் தேதி முதல் நவம்பர் 10 -ம் தேதி வரை  ஐக்கிய அரபு அமீரகத்தில்  நடைபெறும் என ஐபிஎல் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்திருந்தார்,  இந்நிலையில் மேலும் ஐபிஎல் தொடரில் கலந்துகொள்ள சென்னை அணி ஆகஸ்ட் 21 -ம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் புறப்படவுள்ள நிலையில், 8 அணிகளும் பயிற்சி மேற் கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர் தீபக் சாஹர் ஐபிஎல் போட்டிக்காக ஆவலுடன் காத்துள்ளார்.மேலும் சமீபத்தில் தீபக் சாஹர் அளித்த பேட்டி ஒன்றில் தோனி தனக்கு போன் செய்து சில கருத்துக்கள் அவருக்கு வழங்கியதை பற்றி கூறியுள்ளார், அதில் தீபக் சாஹர் கூறியது” நான் ஊரடங்கு காலகட்டத்தில் வீட்டில் உடற்பயிற்சி செய்து வருவேன் அப்பொழுது தோனி எனக்கு தினமும் கால் செய்யவர்.

கால் செய்து தோனி என்னிடம் நீ என் போட்டி முடிந்தவுடன் காயமடைந்து விடுகிறாய். உனக்கு 28 வயதுதான் ஆகிறது உடலில் வலிமையாக வைத்துக்கொள்ள வேண்டும் நீ இன்னும் 100 போட்டிகள் விளையாட வேண்டும் என்று தோனி கூறியதாக தீபக் சாஹர் கூறியுள்ளார்.

இந்நிலையில் மேலும் பேசிய தீபக் சாஹர் நான் அப்பொழுதான் தான் கேப்டன் தோனியின் மாற்றோரு பக்கத்தை புரிந்துகொண்டேன் அவர் என் மீது அக்கறையாக அனைத்து நல்ல கருத்துக்களையும் வழங்கியது எனக்கு மிகவும் பிடித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 06 03 2025
ChandrababuNaidu
IND VS NZ CT 2025
mookuthi amman 2
sunil gavaskar rohit sharma
Actor Abhinay
gold price