இன்றைய போட்டி முடிந்த பிறகு சென்னை வீரர் தீபக் சாஹர் தனது தோழியிடம் தன் காதலை வெளிப்படுத்தினர்.
இன்றைய ஐபிஎல் 2021 இன் 53 வது லீக் போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. முதலில் இறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 134 ரன் எடுத்து 6 விக்கெட்டை இழந்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக ஃபாஃப் டு ப்ளெஸிஸ் 76 ரன்கள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி 13 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 139 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கே.எல் ராகுல் 42 பந்தில் 8 சிக்ஸர் , 7 பவுண்டரி விளாசி 98* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார். இந்நிலையில், இப்போட்டி முடிந்த பிறகு சென்னை வீரர் தீபக் சாஹர் தனது தோழியிடம் தன் காதலை வெளிப்படுத்தினர். பின்னர், இருவரும் மோதிரம் மாற்றி கொண்டனர். இருவரும் மோதிரம் மாற்றி கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தீபக் சாஹருக்கு ரசிகர்கள் ஒருபுறம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மறுபுறம் இன்றைய போட்டியில் தீபக் சாஹர் 4 ஓவர் வீசி 48 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை மட்டுமே எடுத்தார். இதனால், இன்றைய போட்டியில் சென்னை அணி தோல்வி பெற தீபக் சாஹர் காரணம் என கூறி வருகின்றனர். இன்றைய போட்டியில் ஷர்துல் தாக்கூர் 3 ஓவர் மட்டுமே வீசி 3 விக்கெட்டை பறித்து 28 ரன்கள் மட்டுமே கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழக அரசின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என…
சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், 'திமுக அரசு மாநில சுயாட்சி கோரிக்கையின் மூலம் பிரிவினைவாத மனப்பான்மையுடன்…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில், இன்று கோடை மழை பெய்து குளிர்ச்சியை…
நெல்லை : திருநெல்வேலி டவுண் பகுதியில் நெல்லையப்பர் கோயில் அருகே உள்ள மிகவும் பிரபலமான அல்வா கடை என்றால் அது…
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணி பேட்டிங்கில் பட்டயை கிளப்பி வந்தாலும் பந்துவீச்சில் சுமாராக தான் செயல்பட்டு வருகிறது.…