#IPL2022: டாஸ் வென்ற டெல்லி.. முதலில் பேட்டிங் செய்யும் ராஜஸ்தான்!

Default Image

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 58-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடர் தற்பொழுது இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில், பிளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதிபெற அனைத்து அணிகளும் தீவிரமாக விளையாடி வருகிறது. அந்தவகையில் இன்று நடைபெறும் 58-வது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது. DY பட்டில் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

விளையாடும் வீரர்கள்:

ராஜஸ்தான் ராயல்ஸ்:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ரஸ்ஸி வான் டெர் டுசென், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் சென்.

டெல்லி கேபிட்டல்ஸ்:

டேவிட் வார்னர், ஸ்ரீகர் பாரத், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), லலித் யாதவ், ரோவ்மன் பவல், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், சேத்தன் சக்காரியா, குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்