#IPL2022: 10 ஓவர்களில் போட்டியை முடித்த டெல்லி கேபிட்டல்ஸ்.. 6-ம் இடத்திற்கு முன்னேற்றம்!

Default Image

ஐபிஎல் திடரில் இன்று நடைபெற்ற 32-வது போட்டியில் டெல்லி அணி, பஞ்சாப் அணியை வீழ்த்தி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டி மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, டெல்லி அணியின் பந்துவீச்சில் திணறி, 20 ஓவர்கள் முடிவில் தனது அனைத்து விக்கெட்களையும் இழந்து 115 ரன்கள் எடுத்தது.

116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வி ஷா – டேவிட் வார்னர் களமிறங்கினார்கள். தொடக்கம் முதலே சிறப்பாக ஆடத்தொடங்கிய ப்ரித்வி ஷா, 20 பந்துகளில் 41 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் சார்பரஸ் கான் களமிறங்க, 60 ரன்கள் அடித்து வார்னர், 10.3 ஓவர்களில் போட்டியை முடித்தார். இதன்மூலம் டெல்லி அணி, 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, புள்ளிப்பட்டியலில் 6-ம் இடத்திற்கு முன்னேறியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்