ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 58-வது போட்டியில் டெல்லி அணி, 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 161 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 58-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 160 ரன்கள் எடுத்தது. 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்ரீகர் பரத் – டேவிட் வார்னர் களமிறங்கினார்கள்.
இதில் 2 ரன்கள் மட்டுமே அடித்து பரத் தனது விக்கெட்டை இழக்க, அவரைதொடர்ந்து மிட்சேல் மார்ஷ் களமிறங்கினார். இவருடன் டேவிட் வார்னர் இணைந்து அதிரடியாக ஆடத் தொடங்கினார்கள். இந்த கூட்டணி, அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது. இதில் அதிரடியாக ஆடிவந்த மார்ஷ் 62 பந்துகளுக்கு 89 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய ரிஷப் பந்த், 13 ரன்கள் அடித்து போட்டியை முடித்தார். இறுதியாக 18.1 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி, 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 161 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க இன்று (மார்ச் 5) அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு முதல் முறையாக அமெரிக்க நாடாளுமன்றமான ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ்…
உக்ரைன் : கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்கா வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர்…
சென்னை : மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக ஆளும் திமுக அரசு…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…