#IPL2022: 4 விக்கெட்களை வீழ்த்திய தாக்குர்.. 17 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி!

Default Image

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி, 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, புள்ளிப்பட்டியலில் 4-ம் இடத்திற்கு முன்னேறியது.

ஐபிஎல் தொடர் தற்பொழுது இறுதிக்கட்டத்தை நெருங்கிவரும் நிலையில், இன்று நடைபெற்ற 64-வது போட்டியில் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜானி பைர்ஸ்டோ – தவான் களமிறங்கினார்கள்.

இவர்களின் கூட்டணி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. அந்தவகையில் 28 ரன்கள் அடித்து பைரஸ்ட்டோ தனது விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய ராஜபக்ஷே 4 ரன்கள் எடுத்து வெளியேறினார். மத்தியில் ஆடிவந்த தவான் 19 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழக்க, ஒரு ரன் கூட எடுக்காமல் மயங்க அகர்வால் வெளியேறினார். அதனைதொடர்ந்து ஜிதேஷ் சர்மா களமிறங்கி சிறப்பாக அடிவர, மறுமுனையில் விக்கெட்கள் சரிந்துகொண்டே இருந்தது. பின்னர் களமிறங்கிய ராகுல் சஹர் சிறப்பாக ஆடி 25 ரன்கள் எடுத்தார்.

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 9 விக்கெட்களை இழந்து 142 ரன்கள் எடுத்து 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த வெற்றியின்மூலம் டெல்லி அணி, 4-ம் இடத்திற்கு முன்னேறி பிளே ஆப்ஸ் வாய்ப்பை அதிகரித்துக்கொண்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்