DC vs RCB: ரஹானே, தவான் அதிரடி.! பெங்களூரை தொம்சம் செய்து இரண்டாவது இடத்தை பிடித்த டெல்லி.!

Published by
பாலா கலியமூர்த்தி

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் 6 விக்கெட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடரின் இன்று அபுதாபியில் நடைபெற்ற 55-வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக படிக்கல் – ஜோஷ் பிலிப் கூட்டணி களமிறங்கியது. 12 ரன்களில் ஜோஷ் பிலிப் வெளியேற, படிக்கல் அதிரடியாக விளையாடி அரை சத்தத்தை பூர்த்தி செய்து ஆட்டமிழந்தார்.

அவரைதொடர்ந்து களமிறங்கிய கோலி 29 ரன்களும், டி-வில்லியர்ஸ் 35 ரன்களும் எடுத்து வெளியேறினர். இறுதியாக பெங்களூர் அணி 20 ஒவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களை டெல்லி அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. டெல்லி அணியில் பந்துவீச்சை பொறுத்தளவில் அன்ரிச் நார்ட்ஜே சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளும், காகிசோ ரபாடா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து 153 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் தொடக்க வீரர்களான பிருத்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரும் களமிறங்கினர். தொடக்கத்திலேயயே பிருத்வி ஷா சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடிய ஷிகர் தவான் 41 பந்துகளில் 54 ரன்கள் அடித்து வெளியேறினார். இவரைத் தொடர்ந்து டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 7 ரன்களில் அவுட்டானார்.

ஒரு புறம் ரஹானே சிறப்பாக விளையாடி 46 பந்துகளில் 60 ரன்கள் அடித்து, வாஷிங்டன் சுந்தர் ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இறுதியில் 19 ஓவரில் 154 ரன்கள் அடித்து, 6 விக்கெட்டு வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 14 போட்டிகளில் விளையாடி 8 போட்டியில் வெற்றி பெற்று டெல்லி 16 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்து, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. பெங்களூர் பந்துவீச்சை பொறுத்தளவில் ஷாபாஸ் அகமது 2, சுந்தர் மற்றும் சிராஜ் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நள்ளிரவில் மிரட்டப்பட்டுள்ளனர்” – ஆளுநர் ஆர்.என்.ரவி.!

“பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நள்ளிரவில் மிரட்டப்பட்டுள்ளனர்” – ஆளுநர் ஆர்.என்.ரவி.!

உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…

9 minutes ago

“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!

கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…

2 hours ago

காஷ்மீர் பயங்கரவாதிகள் ‘சுதந்திரப் போராளிகள்’.., புகழ்ந்து பேசிய பாக்., துணைப் பிரதமர்.!

இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…

2 hours ago

லஷ்கர் – இ – தொய்பா தளபதி சுட்டுக்கொலை.! இந்திய ராணுவம் அதிரடி..!!

பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…

3 hours ago

ஆளுநர் நடத்தும் மாநாடு : அரசு & தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் புறக்கணிப்பு.!

உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…

5 hours ago

TNPSC குரூப் 4 தேர்வு நாள் அறிவிப்பு! எப்போது தேர்வு.? எத்தனை பணியிடங்கள்.?

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …

5 hours ago