ஐபிஎல் தொடரில் முதல் குவாலிபையர் போட்டியில் டெல்லி அணிக்கு 201 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை அணி.
ஐபிஎல் தொடரில் 13 ஆவது சீசன், தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று நடைபெறும் முதல் பிளே-ஆப்ஸ் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதிவருகிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக் – ரோஹித் ஷர்மா களமிறங்கினார்கள். முதல் பந்திலே ரோஹித் ஷர்மா டக் அவுட் ஆக, டி காக்குடன் சூரியகுமார் யாதவ் இணைந்தார். தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிவந்த டி காக், 40 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அவரைதொடர்ந்து இஷான் கிஷன் களமிறங்கினார்.
அரைசதம் விளாசிய சூரியகுமார் யாதவ், 51 ரன்களில் வெளியேற, அதன்பின் காமிறங்கிய பொல்லார்ட் ஒரு ரன் கூட எடுக்காமல் பெவிலியன் திரும்ப, 13 ரன்களில் க்ருனால் பாண்டியா வெளியேறினார். இறுதியாக மும்பை அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது. 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது டெல்லி அணி களமிறங்கவுள்ளது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…