ஐபிஎல் தொடரில் முதல் குவாலிபையர் போட்டியில் டெல்லி அணிக்கு 201 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை அணி.
ஐபிஎல் தொடரில் 13 ஆவது சீசன், தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று நடைபெறும் முதல் பிளே-ஆப்ஸ் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதிவருகிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக் – ரோஹித் ஷர்மா களமிறங்கினார்கள். முதல் பந்திலே ரோஹித் ஷர்மா டக் அவுட் ஆக, டி காக்குடன் சூரியகுமார் யாதவ் இணைந்தார். தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிவந்த டி காக், 40 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அவரைதொடர்ந்து இஷான் கிஷன் களமிறங்கினார்.
அரைசதம் விளாசிய சூரியகுமார் யாதவ், 51 ரன்களில் வெளியேற, அதன்பின் காமிறங்கிய பொல்லார்ட் ஒரு ரன் கூட எடுக்காமல் பெவிலியன் திரும்ப, 13 ரன்களில் க்ருனால் பாண்டியா வெளியேறினார். இறுதியாக மும்பை அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது. 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது டெல்லி அணி களமிறங்கவுள்ளது.
சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…