ஐபிஎல் தொடரில் தற்பொழுது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வரும் நிலையில், 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கவுள்ளது.
15-வது ஐபிஎல் திருவிழா தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது நடைபெற்று வரும் 3-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. மும்பை DY பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஃபாப் டு பிளஸ்சி – அனுஜ் ராவத் களமிறங்கினார்கள்.
தொடக்கம் முதலே நிதானமாக ஆடிவந்த டு பிளஸ்சி, போக போக வெறித்தனமாக ஆடத் தொடங்கினார். மறுமுனையில் இருந்த அனுஜ் ராவத் அவருடன் இணைந்து சிறப்பாக அடிவர, 21 ரன்கள் குவித்து அனுஜ் ராவத் தனது விக்கெட்டை இழந்தார். அவரையடுத்து விராட் கோலி களமிறங்க, டு பிளஸ்சி அரைசதம் அடித்தால். ஒரு முனையில் டு பிளஸ்சி சிக்சர், பவுண்டரி என வெளுக்க, மறுமுனையில் இருந்த கோலியும் அவருக்கு சமமாக ஆடிவந்தார்.
57 பந்துகளில் 7 சிக்சர், 3 பவுண்டரிகள் என மொத்தம் 88 ரன்கள் அடித்து டு பிளஸ்சி வெளியேற, அவரைதொடர்ந்து தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். அவரும் அதிரடியாக அடிவர, கோலி – தினேஷ் கார்த்திக் கூட்டணியில் அணியின் ஸ்கொர் 200-ஐ கடந்தது. இறுதியாக பெங்களூர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் தற்பொழுது பஞ்சாப் அணி களமிறங்கவுள்ளது.
லக்னோ : ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்கிற சாதனையை ரிஷப் பண்ட் படைத்திருந்தார். லக்னோ அணி…
லக்னோ : இன்று ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் மோதியது.இந்த போட்டியில்…
நடிகர் ஸ்ரீயா இது என அனைவரையும் அதிர்ச்சியாக்க கூடிய அளவுக்கு அவர் இப்போது இருக்கும் தோற்றம் குறித்த புகைப்படங்கள் வெளியாகி…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், அதற்குள் பாஜக மாநிலத்தலைவர் பதவிக்கு புதிய நபரை…
லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில்…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை அடுத்து,…