ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஃபாப் டு ப்ளஸ்ஸிஸ் – அனுஜ் ராவத் களமிறங்கினார்கள். தொடக்கத்தில் டு ப்ளஸ்ஸிஸ் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிக்காட்ட, மறுமுனையில் இருந்த அனுஜ் ராவத் டக் அவுட் ஆனார். அவரையடுத்து விராட் கோலி களமிறங்க, 8 ரன்கள் அடித்து டு ப்ளஸ்ஸிஸ் தனது விக்கெட்டை இழந்தார்.
பின்னர் மேக்ஸ்வெல் களமிறங்கிங்க, விராட் கோலியுடன் இணைந்து அதிரடியாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 12 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழக்க, சுயாஸ் களமிறங்கி 5 ரன்கள் மட்டுமே அடித்து வெளியேறினார். அதிரடியாக ஆடிவந்த மேக்ஸ்வெல் 55 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழக்க, ஷாபாஸ் அஹமத் – டின்ஸ்க் கார்த்திக் கூட்டணி போடு அதிரடியாக ஆடி வந்தார்கள். இதில் தினேஷ் கார்த்திக் 66 ரன்கள் அடித்தார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்துள்ளது. 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது டெல்லி அணி களமிறங்கி விளையாடி வருகிறது.
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…