பிசிசிஐ தலைவரும், இந்தியாவின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி ஜன.6 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜனவரி 2-ஆம் தேதி நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கங்குலி இதயத்தில் இரண்டு அடைப்புகள் உள்ளது என்றும் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, கங்குலி விரைவில் மீண்டு வரவேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், லேசான மாரடைப்பால் பாதிக்கப்பட்ட சவுரவ் கங்குலி வரும் 6-ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒன்பது பேர் கொண்ட மூத்த மருத்துவர்கள் குழு இன்று கங்குலியின் உடல்நிலை குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். இதில், பிரபல இருதயநோய் டாக்டர் தேவி ஷெட்டி மற்றும் டாக்டர் ஆர்.கே.பாண்டா ஆகியோர் மெய்நிகர் தளம் மூலம் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கங்குலிக்கு தற்போது நெஞ்சுவலி இல்லை மற்றும் சரியான நிர்வாகத்தில் இருப்பதால் ஆஞ்சியோபிளாஸ்டியைத் தள்ளிவைப்பது ஒரு பாதுகாப்பான வழி என்று மருத்துவ வாரியம் ஒருமித்த கருத்துக்கு வந்துள்ளது. ஆஞ்சியோபிளாஸ்டி சில நாட்களில் அல்லது வாரங்களில் நிச்சயம் நடக்கும். நாளை மறுநாள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தெரிவித்துள்ளனர். மருத்துவர்கள் கங்குலின் உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னர் அவரது வீட்டில் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நடத்தும் பள்ளிகளிலும், தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் தனியார் பள்ளிகளும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார்.…
டெல்லி : கடந்த வாரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அரசு…
சென்னை : தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கடும் வெப்பம் கொளுத்தி வருகிறது. இந்த வேளையில், சில இடங்களில்…
திருவனந்தபுரம் : கேரள மாநில முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து வளாகங்களிலும் சோதனை நடத்த…