மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் நோயானது, தொடர்ந்து மற்ற நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. இந்த நோயின் தாக்கம் தற்போது இந்தியாவிலும் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
முதலில் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து இதற்குஇடையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருந்தது. இதன் பின் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.இன்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில் மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பால் ஐபிஎல் போட்டிகள் மே 3ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. மே 3 ஆம் தேதிக்கு பின் தொடரை நடத்தலாமா என பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…