CSKvsRR: சிக்ஸர்களை பறக்க விட்ட ஜெய்ஸ்வால்..! சென்னைக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த ராஜஸ்தான்..!

Published by
செந்தில்குமார்

ஐபிஎல் தொடரின் இன்றைய RR vs CSK போட்டியில், முதலில் பேட் செய்த  ராஜஸ்தான் அணி 202/5 ரன்கள் குவித்துள்ளது.

16-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள், ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

இதன்படி, ராஜஸ்தான் அணியில் முதலில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி பவுண்டரிகள், சிக்ஸர்கள் என பறக்கவிட்டு அரைசதம் விளாசினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பட்லர் 27 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழக்க, இதன்பின் களமிறங்கிய சஞ்சு சாம்சன் 17 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார்.

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய துருவ் ஜூரல் தேவையான பந்துகளில் மட்டும் ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் முறையில் ஆட்டமிழக்க, தேவ்தட் படிக்கல் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் களத்தில் இருந்தனர். இறுதியில், ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் எடுத்துள்ளது.

ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 77 ரன்களும், துருவ் ஜூரல் 34 ரன்களும், ஜோஸ் பட்லர் 27 ரன்களும், தேவ்தட் படிக்கல் 27* ரன்களும் குவித்துள்ளனர். சென்னை அணியில் துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

26 mins ago

‘நவம்பர்… தமிழகத்திற்கு அதிக மழை கொண்டு வரும்’ – விளக்கம் கொடுத்த வெதர்மேன்!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…

32 mins ago

ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : “மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்” – நெதென்யாகு சபதம்!

ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…

49 mins ago

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

1 hour ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

10 hours ago

நாளை எந்தெந்த இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் கொடுத்த அலர்ட்!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…

13 hours ago