#IPL2022: பந்துவீச்சில் மிரண்ட டெல்லி.. 91 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி!

Default Image

ஐபிஎல் தொடரின் இன்று டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, புள்ளிப்பட்டியலில் 8- இடத்திற்கு முன்னேறியது.

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் இரண்டாம் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தனர்.

209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் – ஸ்ரீகர் பரத் களமிறங்கினார்கள். இதில் 8 ரன்கள் அடித்து பரத் வெளியேற, மிச்சேல் மார்ஷ் களமிறங்கினார். பின்னர் டேவிட் வார்னர் தவறான ஷாட் ஆடி 19 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழக்க, 25 ரன்கள் அடித்து வெளியேற, அவரையடுத்து சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட், 21 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார். அவரைதொடர்ந்து களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.

இறுதியாக டெல்லி அணி 17.4 ஓவர்களில் தனது அனைத்து விக்கெட்களையும் இழந்து 117 ரன்கள் எடுத்து, 91 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றின்மூலம் சென்னை அணி, புள்ளிப்பட்டியலில் 8- இடத்திற்கு முன்னேறியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்