ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 3 விக்கெட்களில் வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் சென்னை அணி, நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் தனது இரண்டாம் வெற்றியை பதிவு செய்தது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 7 விக்கெட்கள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் – உத்தப்பா களமிறங்கினார்கள்.
ருதுராஜ் டக் அவுட் ஆக, பின்னர் களமிறங்கிய சான்ட்னர் 11 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் அம்பதி ராயுடு களமிறக்க, சிறப்பாக ஆடிவந்த உத்தப்பா 30 ரன்களில் வெளியேறினார். அவரைதொடர்ந்து களமிறங்கிய சிவம் துபே 13 ரன்களிலும், ஜடேஜா 3 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் தோனி களமிறங்கினர்.
கடைசி 4 பந்துகளுக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தோனியின் அதிரடி ஆட்டத்தால் சென்னை அணி வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் தனது இரண்டாம் வெற்றியை பதிவு செய்தது. அதுமட்டுமின்றி மும்பை அணி, தொடர்ந்து 7 போட்டிகளில் தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து, புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
நாட்டையே உலுக்கிய ஜம்மு-காஷ்மீர் பாஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கர பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஒரு நாள் கழித்து, பாகிஸ்தான்…
ஸ்ரீநகர் : இந்தியர்களுக்கு மற்றுமொரு கருப்பு நாளாக காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் அமைந்திருக்கிறது. ஆம், நேற்றைய தினம் ஜம்மு…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில், திருமணமாகி வெறும் மூன்று…
ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பராபரையும்…