ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
ஐபிஎல் தொடரின் இன்று நடைபெற்ற 17-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. புனேவில் உள்ள DY படில் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.
155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா – கேன் வில்லியம்சன் களமிறங்கினார்கள். தொடக்கம் முதலே நிதானமாக ஆடிவந்த கேன் வில்லியம்சன் 40 பந்துகளுக்கு 32 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழக்க, அவரைதொடர்ந்து ராகுல் திரிபாதி களமிறங்கினார். அவர் அபிஷேக் ஷர்மாவுடன் இணைந்து அதிரடியாக அடிவர, 50 பந்துகளில் 75 ரன்கள் அடித்து மிரட்டினார், அபிஷேக் ஷர்மா.
இறுதியாக ஹைதராபாத் அணி, 17.4 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 155 ரன்கள் எடுத்து, நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியை பெற்றுள்ளது. இதன்மூலம் சென்னை அணி, புள்ளிப்பட்டியலில் 9-ம் இடத்தை பெற்றுள்ளது. மேலும், அடுத்த நடைபெறும் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே-ஆப்ஸ் சுற்றுக்குள் நுழைய வாய்ப்புள்ளது.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…