#IPL2022: ப்ளே ஆப்ஸ் வாய்ப்பு.. வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்!

Default Image

ஐபிஎல் தொடரில் ப்ளே ஆப்ஸ் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதிபெறுவதற்கு இன்றைய போட்டி முக்கியமானதாக காணப்படுகிறது.

ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டி, சென்னை அணிக்கு முக்கியமான போட்டியாக கருதப்படுகின்றது. அதற்கு காரணம், ப்ளே ஆப்ஸ் சுற்றில் சென்னை அணி தகுதிபெற இன்னும் 5 போட்டிகளில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தற்பொழுது புள்ளிப்பட்டியலில் சென்னை அணி 4 புள்ளிகள் பெற்று 9-ம் இடத்தில் இருந்து வருகிறது. அதற்கு முன்னதாக 6 புள்ளிகள் பெற்று டெல்லி, கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் 6,7,8 ஆகிய இடங்களில் இருந்து வருகிறது.

எனவே இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் ரன் ரேட் அடிப்படையில் 6-ம் இடத்திற்கு முன்னேற அதிகளவில் வாய்ப்புகள் உள்ளது. மேலும், ப்ளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதிபெற 14 புள்ளிகள் பெற வேண்டிய நிலையில், சென்னை அணிக்கு இன்னும் 7 போட்டிகள் மீதமுள்ளது. இதில் இன்றைய போட்டி உட்பட மொத்தமாக 6 போட்டிகளில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்