ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற 156 ரன்கள் இலக்கு.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 33-வது போட்டியில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி மோதி வருகிறது. DY பட்டில் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா – இஷான் கிஷன் களமிறங்கினார்கள்.
இதில் 2-ம் பந்திலே ஒரு ரன் கூட எடுக்காமல் ரோஹித் ஷர்மா தனது விக்கெட்டை இழக்க, தேவால்டு களமிறங்கினார். பின்னர் இஷான் கிஷன், டக் அவுட் ஆக, பின்னர் சூரியகுமார் யாதவ் களமிறங்கி அதிரடியாக ஆடத் தொடங்கினார். 4 ரன்கள் அடித்த தேவால்டு தனது விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் பவர் பிளே ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி, 3 விக்கெட்கள் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்தது.
சிறப்பாக ஆடிவந்த சூரியகுமார் யாதவ் 32 ரன்கள் எடுத்து வெளியேற, அவரையடுத்து திலக் வர்மா களமிறங்கினார். அவருடன் க்ரித்திக் ஷோகீனுடன் இணைத்தார். 25 ரன்கள் எடுத்து அவர் வெளியேற, பின்னர் களமிறங்கிய பொல்லார்ட் 14 ரன்கள் எடுத்தும், டேனியல் சம்ஸ் 5 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். இறுதியாக மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது சென்னை சூப்பர் அணி பேட்டிங் செய்து வருகிறது.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…