அடுத்த சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனியே தொடர்வார்!

Default Image

இந்தியன் பிரீமியர் லீக் 2023 ஆம் ஆண்டு சிஎஸ்கேவை யார் வழிநடத்துவார் என்று கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

திருவாரூரில் நடைபெற்ற மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் மற்றும் ஐபிஎல் வீரர் சாய் கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் சி.இ.ஓ காசி விஸ்வநாதன்: “எங்கள் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. மாற்றம் இருக்கும் என்று நாங்கள் ஒருபோதும் கூறவில்லை,” என்றும், ஐபிஎல் 2023க்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி நீடிப்பார் என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்