ஐபிஎல் தொடரின் இரண்டாம் போட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஒரு ரன் கூட எடுக்காமல் தல தோனி தனது விக்கெட்டை இழந்தார்.
2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் பெங்களூர் அணி, அதிரடியாக வெற்றி பெற்றது. அதனைதொடர்ந்து இன்று இரண்டாம் போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதி வருகிறது.
இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரராக ருதுராஜ் கெய்க்வாட்–டு பிளெசிஸ் களமிறங்கினார்கள். சென்னை அணி 7 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், 1.4 ஆம் ஓவரில் ஆவேஸ் கான் வீசிய பந்தில் ஒரு ரன் கூட எடுக்காமல் டு பிளெசிஸ் வெளியேற, அவரைதொடர்ந்து 2.1 ஆம் ஓவரில் வோக்ஸ் வீசிய பந்தில் 5 ரன்கள் எடுத்து ருதுராஜ் தனது விக்கெட்டை இழந்தார்.
அதனைதொடர்ந்து ரெய்னா-மொயின் அலி கூட்டணி அமைத்து அதிரடியாக ஆடி வந்தனர். தவறான ஷாட் காரணமாக மொயின் அலி 36 ரன்களில் வெளியேற, ரெய்னாவுடன் ராயுடு இணைந்தார். இருவரும் நிதானமாக அடிவர, 23 ரன்களில் ராயுடு வெளியேறினார். 54 ரன்கள் எடுத்து சுரேஷ் ரெய்னா வெளியேற, பின்னர் களமிறங்கிய தல தோனி ஒரு ரன் கூட அடிக்காமல் ரசிகர்களை ஏமாற்றினார்.
அவரையடுத்து சாம் கரண் களமிறங்கினார். தற்பொழுது சென்னை அணி, 17 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தனர். களத்தில் ஜடேஜா 13 ரன்களுடனும், சாம் கரண் 10 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாட உள்ளன. இந்த…
சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) காலமானார். நிமோனியா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வந்த போப் பிரான்சிஸ்,…
டெல்லி : அசலை மிஞ்சும் வகையில் புது வகையான ரூ.500 கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக பொதுமக்களுக்கு மத்திய உள்துறை…
நாகர்கோவில் : கடந்த 2014ஆம் ஆண்டு கன்னியாகுமரி மேற்கு பகுதியில் உள்ள மிடாலம் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு புறம்போக்கு…