ஐபிஎல் தொடர் இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் அதிரடி வீரர் தேவ்தத் படிக்கல்க்கு கொரோனா தொற்று உறுதியானதாக தகவல்கள் வெளியானது.
2021-ம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த போட்டி, சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு மைதானங்களில் தலா 10 போட்டிகளும், அகமதாபாத் மற்றும் டெல்லி மைதானத்தில் தலா 8 போட்டிகளும் நடைபெறவுள்ளது. அதனைதொடர்ந்து இறுதிப்போட்டி மற்றும் பிளேஆஃப் சுற்று, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதில் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. இதற்காக இரு அணிகளும் தீவிரமாக பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரராக தேவ்தத் படிக்கல்க்கு கொரோனா தொற்று உறுதியானதாகவும், அவர் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியானது. கடந்த சீசனில் அறிமுகமான படிக்கல், 473 ரன்கள் விளாசி அசத்தினார். மேலும், அவர் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இதனால் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவது யார் என்ற எதிர்பார்ப்புகள், ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
2025 ஐசிசி சாம்பியன்ஸ் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…