ஐபிஎல் தொடர் இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் அதிரடி வீரர் தேவ்தத் படிக்கல்க்கு கொரோனா தொற்று உறுதியானதாக தகவல்கள் வெளியானது.
2021-ம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த போட்டி, சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு மைதானங்களில் தலா 10 போட்டிகளும், அகமதாபாத் மற்றும் டெல்லி மைதானத்தில் தலா 8 போட்டிகளும் நடைபெறவுள்ளது. அதனைதொடர்ந்து இறுதிப்போட்டி மற்றும் பிளேஆஃப் சுற்று, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதில் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. இதற்காக இரு அணிகளும் தீவிரமாக பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரராக தேவ்தத் படிக்கல்க்கு கொரோனா தொற்று உறுதியானதாகவும், அவர் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியானது. கடந்த சீசனில் அறிமுகமான படிக்கல், 473 ரன்கள் விளாசி அசத்தினார். மேலும், அவர் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இதனால் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவது யார் என்ற எதிர்பார்ப்புகள், ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…