வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்னதாக ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு கொரோனா உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டித் தொடருக்கு முன்னதாக மிக மோசமான செய்தி வெளியாகியுள்ளது. முதல் ஆர்டி-பிசிஆர் சோதனையில் இந்தியா அணியின் அனைத்து வீரர்களும் நெகடிவ் வந்ததாகவும் இன்று நடைபெற்ற சோதனையில் மூத்த தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், ரிசர்வ் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் மிடில் ஆர்டர் பேட்டர் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய மூன்று வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா உறுதியானால் இந்த மூன்று வீரர்களும் ஒரு வாரம் தனிமையில் இருக்க வேண்டும். பிசிசிஐயின் மருத்துவக் குழு இந்த விஷயத்தை ஆராய்ந்து வருகிறது. இந்த செய்தி உறுதியானால் அவர்களுக்குப் பதிலாக புதிய வீரர்களின் பெயர்களை பிசிசிஐ விரைவில் அறிவிக்கும். இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான ஒருநாள் தொடர் பிப்ரவரி 6-ம் தேதி தொடங்குகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…