ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூஸிலாந்து அணி, மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி நேற்று சிட்னியில் நடைபெற்றது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்த போட்டி பார்வையாளர்களின்றி நடத்தப்பட்டது. இதில் 71 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் விளையாடிய நியூஸிலாந்து அணி வீரரான லுக்கி பெர்குசனுக்கு தொண்டை வலி எடுத்தது. இதனையடுத்து அவரை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்து தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என சோதனை நடத்தப்படுகிறது.
மேலும், போட்டி தொடங்கும்முன் ஆஸ்திரேலியா வீரரான கேன் ரிச்சர்ட்சன் தொண்டை வலி இருப்பதாக கூறினார். இதனையடுத்து அவருக்கு கொரோனா அறிகுறி இருக்கிறதா என சோதனை நடத்தப்பட்டது. பின் கொரோனா தொற்று இல்லை என கண்டறிந்த பின், அவரை விளையாட அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…