IPL 2020: சென்னை அணியின் பந்துவீச்சாளர் உட்பட சிலருக்கு கொரோனா?

Default Image

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர் உட்பட சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தகவல்கள் வெளியானது.

உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 -ம் தேதி தொடங்கும் என ஐபிஎல் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக, பயிற்சி ஆட்டத்தை முடித்துவிட்டு, 8 அணிகளை சார்ந்த வீரர்கள், ஊழியர்கள், நிர்வாகிகள் என அனைவரும் அமீரகம் சென்றடைந்தனர். இந்தநிலையில், ஐபிஎல் தொடருக்காக கடந்த 21- ம் தேதி ஐக்கிய அமீரகம் சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்பொழுது அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் உட்பட10-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியானதாகவும், அவர்கள் தொடர்பிலுள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்