ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் விளையாடும் தென் ஆப்பிரிக்கா அணியின் ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ், “16 கோடிக்கு தகுதியானவர் இல்லை” என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடர், கொரோனா பரவலுக்கும் மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அதிகபட்ச தொகையான ரூ.16 கோடிக்கு ஏலம்போனவர், தென்னாபிரிக்கா அணியின் ஆல்-ரவுண்டர் கிறிஸ்மோரிஸ். இவரின் அடிப்படை விலை ரூ.75 லட்சமாக இருந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை ரூ.16.25 கோடிக்கு ஏலம் எடுத்தது.
இதுவரை ஐபிஎல் தொடரின் எந்தவொரு வெளிநாட்டு வீரரும் இவ்வளவு அதிகமான தொகைக்கு ஏலம் போனது கிடையாது. அவர் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இதுவரை 4 போட்டிகளில் விளையாடி, ஒரே ஒரு வெற்றியை மட்டும் பதிவு செய்தது. டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ஆணை வெற்றிபெற்றது. அந்த வெற்றிக்கு கிறிஸ் மோரிஸ், முக்கிய பங்கு வகித்தார்.
34 வயதான கிறிஸ் மோரிஸ், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் 4 போட்டிகள் விளையாடிய அவர், 48 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். பந்துவீச்சில் 5 விக்கெட்களை கைப்பற்றினார். இந்நிலையில், ரூ.16 கோடிக்கு கிறிஸ் மோரிஸ் வொர்த் இல்லையென இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார். மேலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஏலத்தில் கிறிஸ் மோரிசுக்கு வழங்கிய தொகை ரூ.16 கோடி அதிகம் என்று நினைப்பதாகவும், தனக்கு அதிகமான விலை கொடுத்ததன் அழுத்ததை மோரிஸ் உணர்ந்து வருவதாகவும், 2 போட்டிகளில் ரன்கள் அடிப்பார் என்றும், சில போட்டிகளில் காணாமல் போய் விடுவார் என்று தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…