ஒழுங்கற்ற பந்துவீச்சாளர்…உலககோப்பைக்கு செட் ஆகமாட்டார்! சிராஜை விமர்சித்த ஸ்ரீகாந்த்!

Published by
பால முருகன்

Mohammed Siraj : முகமது சிராஜ் ஒழுங்கற்ற பந்துவீச்சாளர் என அவரை கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் உலகக்கோப்பை டி 20 கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் மாதம் முதல் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் எல்லாம் இடம்பெற போகிறார்கள் என்பதற்கான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

பிசிசிஐ நிறுவனம் இன்னும் யாரெல்லாம் இந்த உலகக்கோப்பை போட்டியில் விளையாடுவார்கள் என்று அறிவிக்காமல் இருக்கிறது. இதற்கிடையில், அணியில் இந்த வீரர்கள் எல்லாம் இடம்பெற வேண்டும் இந்த வீரர்கள் எல்லாம் இடம்பெற கூடாது என பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் உலகக்கோப்பையில் இந்திய அணியின் வேகபந்து வீச்சாளர் முகமது சிராஜ்  விளையாட சரியானவர் இல்லை என விமர்சித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” உலகக்கோப்பை போட்டியில் விக்கெட் எடுப்பதற்காக கண்டிப்பாக இந்திய அணிக்கு 5 பந்துவீச்சாளர்கள் வேண்டும்.

இரண்டு சுழற்பந்துவீச்சாளர்கள் கண்டிப்பாக அணியில் இடம்பெறுவார்கள். மீதமுள்ள 3 வேகப்பந்து வீச்சாளராக இருக்க தான் வாய்ப்புகள் அதிகம். கண்டிப்பாக பும்ரா அணியில் இருப்பார். அவருக்கு அடுத்த பந்துவீச்சாளராக அர்ஷ்தீப் சிங்கும் இருப்பார். ஆனால் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஆக இருக்கவே முடியாது. ஏனென்றால், அவர் ஒரு போட்டியில் நன்றாகப் பந்துவீசுவார். அதன் பிறகு 10 போட்டிகளில் சரியாக செயல்படமாட்டார். எனவே அவர் உலகக்கோப்பை போட்டிக்கெல்லாம் செட் ஆகமாட்டார்.

என்னை பொறுத்தவரை அவர் ஒரு ஒழுங்கற்ற பந்துவீச்சாளர். நான் இதனை சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. நீங்கள் அதை உலகக் கோப்பையில் பார்த்து இருப்பீர்கள். என்னை பொறுத்தவரை உலகக்கோப்பை போட்டியில் விளையாட வீரர்களை தேர்வு செய்கிறீர்கள் என்றால் டெத் ஓவரில் யார் சிறப்பாக பந்து வீசுகிறார்கள் என்று பார்க்க வேண்டும். அவரை தேர்வு செய்யவேண்டும்.

முகமது சிராஜிக்கு பதிலாக நீங்கள் அவேஷ் கான் தேர்வு செய்து அவரை வைத்து விளையாடலாம். அவேஷ் கான் சிறந்த பந்துவீச்சாளர் அவர் நன்றாக விளையாட கூடிய ஒரு வீரர். கண்டிப்பாக நான் தேர்வாளராக இருந்தா சிராஜை எடுத்து செல்லவே மாட்டேன்” என்று கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

LSG vs DC : லக்னோவை பந்தாடிய டெல்லி கேபிட்டல்ஸ்! 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…

2 hours ago

LSG vs DC : அதிரடி காட்டிய லக்னோ! இறுதியில் சுருட்டிய டெல்லி! இதுதான் டார்கெட்!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

4 hours ago

LSG vs DC : பதிலடி கொடுக்குமா லக்னோ? டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

6 hours ago

பயங்கரவாதிகள் தாக்குதல் : உத்தரவிட்ட பிரதமர் மோடி! காஷ்மீர் விரையும் அமித்ஷா!

ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…

6 hours ago

J&K சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு.! ஒருவர் உயிரிழப்பு.., 10 பேர் படுகாயம்.!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…

6 hours ago

“எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி!” அஜித் குமார் டீம் நெகிழ்ச்சி!

சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…

7 hours ago