ஐபிஎல் தொடரின் 15 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதிவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச தேர்வு செய்துள்ளது.
சென்னை அணியின் தொடக்க அடக்கரைகளாக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஃபாஃப் டு பிளெசிஸ் கொல்கத்தா வீசும் பந்துகள் நான்கு திசைகளிலும் பறக்கிறது.தற்பொழுது நிலவரம் படி சென்னை அணி 13 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பு[இழப்பிற்கு 115 ரன்களை எடுத்துள்ளது.ருதுராஜ் கெய்க்வாட் 64 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் ஃபாஃப் டு பிளெசிஸ் 53 மற்றும் மொயீன் அலி 1 களத்தில் உள்ளனர்.
சென்னை அணி வீரர்கள்:
ருதுராஜ் கெய்க்வாட், டு பிளெசிஸ், மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ்.தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர் ), சாம் கரண், ஷார்துல் தாக்கூர், லுங்கி நிகிடி, தீபக் சஹார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கொல்கத்தா அணி வீரர்கள்:
நிதீஷ் ராணா, சுப்மான் கில், ராகுல் திரிபாதி, ஈயோன் மோர்கன் (கேப்டன்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர் ), ரஸ்ஸல், பாட் கம்மின்ஸ், கமலேஷ் நாகர்கோட்டி, சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி, பிரசீத் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை அணி இதுவரை மூன்று போட்டியில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது. கொல்கத்தா அணி விளையாடிய 3 போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றியும் இரண்டு போட்டியில் தோல்வியடைந்து உள்ளது.
சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…