சென்னை அணி 15.4 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீச தேர்வு செய்தது. முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 106 ரன்கள் எடுத்திருந்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக தமிழக வீரர் ஷாருக்கான் 47 ரன்கள் எடுத்தார்.
பின்னர் இறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், டு பிளெசிஸ் இருவரும் இறங்கினர். வந்த வேகத்தில் ருதுராஜ் 5 ரன்னில் வெளியேறினார். பின்னர், இறங்கிய மொயீன் அலி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 46 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். அடுத்து களம் கண்ட சுரேஷ் ரெய்னா 8, அம்பதி ராயுடு ரன் எடுக்காமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.
இறுதியாக சென்னை அணி 15.4 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கடைசிவரை களத்தில் சாம்கரண் 5*, டு பிளெசிஸ் 36* ரன்களுடன் நின்றனர். நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…