பஞ்சாப் அணியை வதம் செய்து வெற்றியை ருசித்த சென்னை..!

Default Image

சென்னை அணி 15.4 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை  முதலில் பந்து வீச தேர்வு செய்தது. முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 106 ரன்கள் எடுத்திருந்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக தமிழக வீரர்  ஷாருக்கான் 47 ரன்கள் எடுத்தார்.

பின்னர் இறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்களாக  ருதுராஜ் கெய்க்வாட், டு பிளெசிஸ் இருவரும் இறங்கினர். வந்த வேகத்தில் ருதுராஜ் 5 ரன்னில் வெளியேறினார். பின்னர், இறங்கிய மொயீன் அலி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 46 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். அடுத்து களம் கண்ட சுரேஷ் ரெய்னா 8, அம்பதி ராயுடு ரன் எடுக்காமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.

இறுதியாக சென்னை அணி 15.4 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் எடுத்து  வெற்றி பெற்றது. கடைசிவரை களத்தில் சாம்கரண் 5*, டு பிளெசிஸ் 36* ரன்களுடன் நின்றனர். நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்