டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் இறுதியில் நடக்க இருந்த ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் ஐபிஎல் தொடர் நடைபெறுமா..? அல்லது ஒத்தி வைக்கப்படுமா..? என்ற கேள்வி எழுந்த நிலையில், பிசிசிஐ இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் இருப்பதால் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்தது.
இதனால், செப்டம்பர் 19 (இன்று ) முதல் நவம்பர் 10 வரை நடைபெறும் என அறிவித்தது. இதையடுத்து, 8 அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ளன. ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை அணியும் மோத உள்ளன. இந்த ஐபிஎல் தொடர் ரசிகர்கள் இல்லாமல் காலி மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டி ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் லெவன்: முரளி விஜய், ஷேன் வாட்சன், ஃபஃப் டு பிளெசிஸ், அம்பதி ராயுடு, கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, சாம் குர்ரான், தீபக் சஹார், பியூஷ் சாவ்லா, லுங்கி என்ஜிடி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மும்பை அணி வீரர்கள் லெவன்: ரோஹித் சர்மா, குயின்டன் டி கோக், சூர்யகுமார் யாதவ், திவாரி, கிருனல் பாண்ட்யா, ஹார்டிக் பாண்ட்யா, கீரோன் பொல்லார்ட், ஜேம்ஸ் பாட்டின்சன், ராகுல் சாஹர், ட்ரெண்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
சென்னை : நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக, நாளை நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, கேரள முதலமைச்சர்…
பாட்னா : பாட்னாவின் பாடலிபுத்ரா விளையாட்டு வளாகத்தில் நேற்று நடந்த செபக்தக்ரா உலகக் கோப்பை தொடக்க விழாவில்,தேசிய கீதம் இசைக்கப்படும்போது…
சென்னை : பிரபல ரவுடி தூத்துக்குடியைச் சேர்ந்த ஐகோர்ட் மகாராஜா சென்னையில் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டார். சென்னை கிண்டியில் பதுங்கியிருந்த…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (மார்ச் 22) தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு…
சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தங்களுக்கு…
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…