ஹாட்ரி வெற்றி .., கொல்கத்தாவை வீழ்த்தி முதலிடத்திற்கு சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் ..!

Published by
murugan

சென்னை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 172 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

இன்று 38-வது லீக் போட்டியில் சென்னை -கொல்கத்தா அணிகள் அபுதாபி ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் விளையாடியது. டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக வெங்கடேஷ் ஐயர் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் களமிறங்கினர். வந்த வேகத்தில் 9 ரன்கள் எடுத்து சுப்மான் கில் ரன் அவுட் ஆனார்.

அவரைத் தொடர்ந்து, வெங்கடேஷ் ஐயர் 18 ரன்கள் எடுக்க பின்னர், களமிறங்கிய  ராகுல் திருப்பதி சிறப்பாக விளையாடி 33 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். இறுதியாக 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 171 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால், 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெசிஸ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்தில் இருந்து இருவரும் சிறப்பாக விளையாடினர்.

சிறப்பாக விளையாடி வந்த ருதுராஜ் ரஸ்ஸல் வீசிய பந்தில் மோர்கனிடம் கேட்சை கொடுத்து 40 ரன்னில் வெளியேறினார். இவர்கள் கூட்டணியில் 74 ரன் எடுத்தனர்.  அடுத்த சில பந்தில் ஃபாஃப் டு பிளெசிஸ் 43 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து இறங்கிய அம்பதி ராயுடு வந்த வேகத்தில் 10 ரன் எடுத்து வெளியேற, பின்னர் மொயின் அலி அதிரடி காட்ட 32 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

பின்னர் களமிறங்கிய தோனி ஒரு அணியிலும், சுரேஷ் ரெய்னா 11 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழக்க சென்னை அணி இக்கட்டான சூழ்நிலையில் சென்றது. அப்போது களமிறங்க ஜடேஜா, சாம் கரண் களமிறங்க ஜடேஜா 4 பந்தில் இரண்டு சிக்சர், இரண்டு பவுண்டரி என 20 ரன்கள் விளாசி போட்டியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார். பின்னர், கடைசி ஓவரில் 4 ரன் தேவை என்ற நிலையில், முதல் பந்தில்  சாம் கரண் விக்கெட்டை இழக்க அடுத்து இறங்கிய ஷர்துல் தாக்கூர் 3 ரன்கள் எடுக்க அடுத்து பந்தில் ஜடேஜா விக்கெட்டை பறிகொடுத்தார்.

கடைசி ஒரு பந்தில் ஒரு ரன் என்ற நிலையில் தீபக் சாஹர் ஒரு ரன் எடுத்து சென்னை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 172 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இதனால், புள்ளி பட்டியலில் 16 புள்ளிகள் பெற்று முதலிடத்திற்கு சென்றது.

 

Published by
murugan

Recent Posts

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

11 mins ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

32 mins ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

35 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

1 hour ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

1 hour ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

2 hours ago